இம்ரான் கான் என்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்பினார் பெண் பத்திரிகையாளர் பரபரப்பு!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், என்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்பினார்,’ என்று முன்னாள் பெண் பத்திரிகையாளர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அவர் கூறியுள்ளதால், அந்நாட்டு அரசியல் களம் பற்றி எரிந்து வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் சிந்தியா ரிச்சி. இவர் 10 ஆண்டுகள் பாகிஸ்தானில் பணியாற்றி உள்ளார். அப்போது, பல்வேறு அரசியல் தலைவர்களை நேரடியாக சந்தித்து பேட்டி கண்டுள்ளார். சமீப காலமாக அவர் வெளியிட்டு வரும் டிவிட்டர் பதிவுகளால். பாகிஸ்தான் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர் கடந்த மாதம் 28ம் தேதி வெளியிட்ட முதல் டிவிட்டர் பதிவில், பாகிஸ்தானின் மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்தார். அதில், ‘பெனாசிர் புட்டோ மட்டும் இப்போது உயிருடன் இருந்திருந்தால், தனது கணவர் ஆசிப் அலி சர்தாரியுடன் உறவு வைத்துக் கொண்ட பெண்களை தனது பாதுகாவலர்களை விட்டு பலாத்காரம் செய்யச் சொல்லி இருப்பார்,’ என்று பற்ற வைத்தார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மற்றொரு டிவிட்டை சிந்தியா ரிச்சி தட்டி விட்டுள்ளார். கடந்த 6ம் தேதி அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அதேபோல், முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானியும், ஒரு கேபினட் அமைச்சரும் என்னை பொது இடத்தில் சந்தித்தபோது அநாகரீகமாக தடவி அத்து மீறினர்,’ என்று கூறியிருந்தார். இதனால், பாகிஸ்தான் அரசியல் களத்தில் கிலானி, மாலிக்கின் தலைகள் உருள ஆரம்பித்தன. வழக்கம் போல் அவர்களும், ‘சிந்தியா ரிச்சி மனம்போன போக்கில் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகிறார். அவருடைய குற்றச்சாட்டு தவறானது; ஆதாரமற்றது,’ என்று மறுப்பு தெரிவித்தனர். ஆனால், ஒரு பெண் தன்னை பற்றியே தவறாக சொல்வாரா என்று இருவரையும் பெண்ணியவாதிகள் மடக்கி வருகின்றனர்.
‘பாகிஸ்தான் மக்கள் கட்சி’யை குறி வைத்து வெளியான இந்த பகீர் புகார்களால் அதன் தலைவர்கள் ஆடிப் போயுள்ளனர். இது குறித்து அமெரிக்க அரசிடம் புகார் தெரிவித்து, சிந்தியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பாகிஸ்தான் தலைவர்களின் அலறலை எல்லாம் கண்டுக் கொள்ளாத சிந்தியா, ‘இந்த பரபரப்பு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?’ என்ற பாணியில், தனது நண்பர் மூலம் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது, பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ள அலி சலீம். சிந்தியாவுக்கு மிகவும் நெருக்கமானவர்.
சமீபத்தில் இவர் நடத்திய டிவி நிகழ்ச்சி ஒன்றில், ‘இம்ரான்கான் (இப்போதைய பாகிஸ்தான் பிரதமர்) சிந்தியாவுடன் படுக்கையை பகிர்ந்துக் கொள்ள ஆசைப்பட்டுள்ளார். இதைப் பற்றி சிந்தியாவிடம் நேரடியாக இம்ரான்கான் கேட்டுள்ளார். இதை சிந்தியா என்னிடம் கூறினார்,’ என்று தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் தலைவர்களை அலற வைத்த சிந்தியா, இப்போது பிரதமர் இம்ரான் மீதே கூறும் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….