பொதுத் தேர்தல் குறித்த வர்த்தமானி இன்று வெளியீடு?
எதிர்வரும் பொதுத்தேர்தல் நடைபெரும் திகதி குறித்த வர்த்தமானி இன்று வெளியிடப்படுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின்தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்திருந்தார்.
பொதுத் தேர்தலுக்கான திகதி தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தப்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
இதன்படி, இந்த கலந்துரையாடலில் பொதுத் தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்டுமென எதிர்பார்க்கப் படுகின்றது.