கொரோனா வைரஸ் தொற்று நிலைமை உலகம் முழுவதும் மோசமடைந்து வருகிறது!

கொரோனா வைரஸ் தொற்று நிலைமை உலகம் முழுவதும் மோசமடைந்து வருகிறது என உலக சுகாதார அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரசுக்கு உலக அளவில் 71 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஜெனீவாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:-

” கொரோனா வைரஸ் தொற்று நிலைமை உலகம் முழுவதும் மோசமடைந்து வருகிறது. அமெரிக்கா கொரோனா தொற்றுநோய்களின் தினசரி எண்ணிக்கை அதிகம் பதிவு செய்து வருகிறது.

இன நீதிக்கான வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்காவிலும் அதற்கு அப்பாலும் பரவியுள்ள நிலையில், ஆர்ப்பாட்டம் செய்யும் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

கிழக்கு ஆசியாவிற்குப் பிறகு, ஐரோப்பா இந்த நோயின் மையமாக மாறியது, ஆனால் இப்போது அமெரிக்காமுந்தியுள்ளது.

ஐரோப்பாவில் நிலைமை மேம்பட்டு வருகின்ற போதிலும், உலகளவில் இது மோசமடைந்து வருகிறது.

கடந்த 10 நாட்களில் ஒன்பது நாட்களில் 100,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன. நேற்று, 136,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை பாதிப்புகளில் கிட்டத்தட்ட 75 சதவீதம் 10 நாடுகளிலிருந்து வந்தவை – பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் தெற்காசியாவில் இருந்து தான் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *