விருப்பு வாக்கு விபரம் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படும்
பொதுத்தேர்தலுக்கான திகதி இவ்வாரத்துக்குள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று தெரிவித்தார்.
அத்துடன் பொதுத்தேர்தலுக்கான விருப்பு வாக்கு விபரம் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார்.
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை இவ்வாரம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, இன்று உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதியையும் சந்தித்ததாகவும் குறிப்பிட்டார்.