இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் மேலும் 12 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 1,857 ஆக அதிகரித்துள்ளது. இன்று இதுவரையில் 22 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கொரோனா தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்களாவர். கடற்படையினரும் உள்ளடங்குகின்றனர்.
வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைபெற்று வருபவர்களில் 990 பேர் குணமடைந்துள்ளனர்.
856 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.11 பேர் பலியாகியுள்ளனர்.