அதிக விலையில் அரிசி விற்பனை செய்த வர்த்தகர்கள் 60 பேருக்கு எதிராக வழக்கு!

அதிக விலையில் அரிசி விற்பனை செய்த வர்த்தகர்கள் 60 பேருக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

விற்பனை நிலையங்களை சோதனைக்குட்படுத்தும் நடவடிக்கை இன்று (08) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பான உணவுப்பொருட்களை நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *