நாளை “கொவிட் -19” பொதுத் தேர்தலுக்கான ஒத்திகை!
சமூக இடைவெளி உட்பட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பொதுத்தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பான சிறப்பு ‘ஒத்திகை தேர்தல்’ நாளை நடைபெறவுள்ளது.
அம்பலங்கொடயிலுள்ள விகாரையொன்றில் நாளை முற்பகல் 10 மணி முதல் நண்பகல் 12 மணிவரை குறித்த தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.சுமார் 200 பேர்வரை இதில் பங்கேற்கவுள்ளனர்.