மடுல்சீமையில் நீரில் மூழ்கி மூவர் உயிரிழப்பு

பதுளை – பசறை, மடுல்சீமை, கெரடியெல்ல பகுதியில் நீர் நிரம்பிய குழியில் மூழ்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த குழியில் குளித்துக்கொண்டிருந்த போது இன்று முற்பகல் இவர்கள் நீரிழ் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

38 வயதான ஒருவரும் 12 வயதான அவரது மகளும் 13 வயதான மற்றுமொரு சிறுமியுமே உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் பசறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மடுல்சீமை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *