தன்னை யாரும் பதவியிலிருந்து நீக்க முடியாது!ரோஸி அதிரடி

தேசிய அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கில்லையென தெரிவித்துள்ளார் கொழும்பு மாநகரசபை மேயர் ரோஸி சேனநாயக்க.
ஐ.தே.கவிலிருந்து அவர் நீக்கப்பட்டதாக வெளியாக செய்திகள் தொடர்பாக விளக்கமளித்தபோதே இதனை தெரிவித்தார்.
தன்னை யாரும் நீக்க முடியாது என தெரிவித்த அவர், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அணி மோதலிற்குள் தான் சிக்கவில்லையென தெரிவித்துள்ளார். தனது மகன் ஐக்கிய மக்கள் சக்தி மூலம் போட்டியிட்டாலும், அந்த கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்யவில்லையென தெரிவித்துள்ளார்.
தேசிய அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லையென்றாலும், உள்ளூராட்சி அரசியலில் தொடர்வேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *