இலங்கையில் அதிகரித்து செல்லும் கொரோனா வைரஸ் நோயாளிகள்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளனோர் எண்ணிக்கை இன்று வியாழக்கிழமை மாலை 9.50 மணி வரை 1791 ஆக அதிகரித்துள்ளது.

இன்றையு தினம் புதிதாக வைரஸ் தொற்றுக்குள்ளான 42 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய இது வரையில் நாட்டில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1791 ஆக அதிகரித்துள்ளதோடு, இன்றைய தினம் குணமடைந்த மூவருடன் சேர்த்து குணமடைந்தோர் எண்ணிக்கை 839 ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு தற்போது 941 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று புதன்கிழமை மாத்திரம் 66 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான 11 உயிரிழந்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *