பொதுத் தேர்தல் தொடர்பான தீர்மானம் இன்று
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானம் இன்று இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னரே அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப் போவதில்லை என உயர்நீதிமன்றம் அறிவித்ததை தொடர்ந்து எமது செய்திப் பிரிவு தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளரை தொடர்புகொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.