கடலிலுள்ள பிளாஸ்டிக் பொருட்களை மறு சுழற்சி செய்யும் திட்டம்
கடற்கரைகளில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மைக்ரோ பிளாஸ்டிக்குகளாக மாறி உணவின் ஊடாக மீண்டும் மனித உடலில் உட்புகுவதாக அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய வேதிப்பொருட்களை உறிஞ்சும் நுண்ணியிரிகள் தென் மாகாணம் மற்றும் நீர்கொழும்பு கடற்பரப்பில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாரா நிறுவனம் நடத்திய ஆய்விலேயே குறித்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்த மோசமான நிலைக்கு தீர்வாக கடலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி செய்யும் திட்டத்தை கடற்படையினர் ஆரம்பித்துள்ளது