அமரர் தொண்டமானின் இறுதி ஊர்வலம் தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளதாக முறைப்பாடு
மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் அஞ்சலி ஊர்வலம் தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் தம்மால் தனித்து ஆராய முடியாதென்பதால் ஆணைக்குழுவின் இதர உறுப்பினர்களுடன் ஆராயவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.