தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியாமல் தவிக்கும் மகள்
மறைந்த முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகம் தொண்டமானின் புதல்வி கோதைநாச்சியார் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியாமற் போயுள்ளது.
வெளிநாட்டில் இருந்துவந்த அவர் தற்போது மருத்துவர்களின் ஆலோசனைப்படி 14 நாட்கள் நீர்கொழும்பு பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஓமானில் மருத்துவராக தொழில் செய்துவரும் நிலையில் அவர் தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.