பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா வைரஸ்

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் தௌபீக் உமருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை அவரே நேரடியாக ஒரு தொலைக்காட்சிக்கு பேசி உறுதி செய்துள்ளார். மேலும், அவர் தான் இந்த நோயில் இருந்து மீள அனைவரும் வேண்டிக் கொள்ளுமாறு உருக்கமான வேண்டுகோள் வைத்துள்ளார்.
தௌபீக் உமர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நான்காவது கிரிக்கெட் வீரர் ஆவார்.
இதுவரை மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. சபார் சர்ப்ராஸ் என்ற முன்னாள் பாகிஸ்தான் வீரர், மஜித் ஹக் என்ற ஸ்கொட்லாந்து வீரர் மற்றும் சோலோ நிக்வேனி என்ற தென்னாபிரிக்க வீரருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *