புதுச்சுடர் குழுமத்தின் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்
இலங்கையில் நேற்று ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமையினால் இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் இன்று (24) ஈதுல் பிதர் எனப்படும் நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர்.
புனித ரமழான் மாதத்தில் விழித்திருந்து, பசித்திருந்து ஒரு மாதகாலமாக நோன்பு நோற்ற இஸ்லாமியர்கள் இன்று மன மகிழ்ச்சியுடன் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.
நோன்பானது ஒரு முஸ்லிமுடைய மனக் கட்டுப்பாட்டை உருவாக்கும் சிறந்த பயிற்சியாகவும் அமைந்துள்ளது.
இன்று நோன்பு பெருநாளை கொண்டாடும் இஸ்லாமிய வாசகர்கள் அனைவருக்கும் “புதுச்சுடர்” ஊடகக் குழுமம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.