மாளிகாவத்தையில் உயிரிழந்த மூன்று பெண்கள் தொடர்பில் ஆறு பேர் கைது

கொழும்பு – மாளிகாவத்தையில் வீடொன்றுக்கு அருகில் பணம் வழங்கப்பட்ட போது, ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

இதன்போது 09 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

இவர்களில் 07 பெண்களும் 02 ஆண்களும் அடங்குவதாக தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் பணிப்பாளர் டொக்டர் லயனல் முஹந்திரம் குறிப்பிட்டார்.

காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என அவர் கூறினார்.

சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *