இலங்கையில் ஜுன் மாதம் தேர்தல் நடத்த முடியாது
திட்டமிட்டபடி ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சத்தியங்கள் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு, உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.
ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த திகதி குறிப்பிட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை சவாலுக்குட்படுத்தும் அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றால் இன்று மூன்றாவது நாளாக பரிசீலனைக்கு எடுக்கப்பட்டன.
பிரதம நீதியரசர் தலைமையிலான 5 நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு இந்த மனுக்களை நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை பரிசீலனைக்கு எடுத்தன.
இந்த நிலையில் இன்று தேர்தல்கள் ஆணைக்குழு தனது நிலைப்பாட்டை உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.