இலங்கையில் திடீரென அதிகரித்த கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்
இலங்கையில் மேலும் 28 கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 20 ஆக அதிகரித்துள்ளது. இன்று மாத்திரம் இதுவரையில் 28 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
569 பேர் குணமடைந்துள்ளனர். 442 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்