மத்திய செயற்குழு நாளை அவசரமாக கூடுகிறது

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை திங்கட்கிழமை அவசரமாக கூடவுள்ளது. கொழும்பு, டாலி வீதியிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *