ஜனாதிபதி தலைமையில் தேசிய இராணுவ வீரர் நினைவுதின நிகழ்வு

போர் வெற்றியின் 11ஆவது ஆண்டை முன்னிட்டு, உயிர்நீத்த இராணுவத்தினரை நினைவுகூரும் ‘தேசிய இராணுவ வீரர் நினைவுதின’ நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாளை மறுதினம் (19) நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள இராணுவ நினைவு தூபிக்கு முன்னால் நடைபெறும் இதற்கான நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் அதிகளவுகூடும் வகையில் நிகழ்வுகளை நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடத்தப்படும் முக்கிய நிகழ்வுகளில்கூட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி குறைந்தளவானோரின் பங்குபற்றலுடனேயே நடைபெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்படி நிகழ்வில் உயிர்நீத்த இராணுவத்தினர் சார்பில் சுமார் 20 பேரே பங்கேற்பார்கள் என தெரியவருகின்றது.

ரணவிரு சேவா அதிகார சபையே 11 ஆவது வருடமாகவும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *