ஆசியாவில் தங்கத்தினால் வடிவமைக்கப்பட்ட பள்ளிவாசல்
புரூனே நாட்டில் தலைநகரத்தில் அமைக்கப்பட்டு உள்ள அரச இஸ்லாமிய மசூதி தான் சுல்தான் உமர் அலி சைஃபுதீன் மசூதி. ஆசிய பசுபிக்கில் சுற்றுலா பயணிகளை பெரிய அளவில் ஈர்க்கின்ற பள்ளி வாசல்களில் இதுவும் ஒன்று. புரூனேயில் உள்ள சுற்றுலா தலங்களில் மிக மிக அற்புதமானதும் இதுதான்.
புரூனே நதி ஓரத்தில் அமைக்கப்பட்ட இந்த மசூதி பளிங்குகளால் ஆன வாயில்களைக் கொண்டது. இதன் மாடங்கள் தங்கத்தால் ஆனவை. பசுமையான தோட்டங்கள், நீரூற்றுக்கள் இதற்கு பேரழகு சேர்க்கின்றன.