கொழும்பு, கம்பஹாவில் தொடரும் ஊரடங்கு!
கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரையிலும் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், களுத்துறை மற்றும் புத்தளம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களுக்கு நாளை அதிகாலை 5.00 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது.
இவ்வாறு தளர்த்தப்படும் ஊரடங்கு மீள் அறிவித்தல் வரை தினமும் இரவு 8.00 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு மீண்டும் அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிவிக்கப்பட்டுள்ளது