கத்தாரில் பணிபுரியும் ஊழியர்கள் அன்றாட உணவுக்காகக் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் கத்தாரில் அதிகரித்துள்ள நிலையில் கத்தாரின் தற்போதைய நிலை பற்றி இங்கிலாந்தின் பிரபல www.theguardian.com செய்தியை சுருக்கமாக இங்கு பதிவிடுகின்றோம்.குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்கள் நிறைந்த வளமான நாடு கத்தார். கொரோனா தொற்று பரவலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் மத்திய கிழக்கு நாடான கத்தாரும் ஒன்று. கத்தாரில் பரிசோதனை செய்யப்பட்ட 4 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அங்கு பலரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமானோர் வேலையிழந்து விட்டனர்.இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து அங்கு வேலைக்குச் சென்றிருந்தவர்களில் பலரும் தங்களது அன்றாட உணவுக்காகக் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களிடம் அந்நாளிதழின் செய்தியாளர் பேசினார்.திடீரென வேலையிழந்துவிட்டதால் செய்வதறியாது அலைந்து கொண்டிருப்பதாகவும் சொந்த நாட்டுக்கும் திரும்பிச் செல்ல முடியாத நிலையில் ஒவ்வொரு வேளை உணவுக்கும் தங்களது முன்னாள் முதலாளிகளையும் அறநிறுவனங்களையும் நம்பி இருப்பதாகவும் அவர்கள் கூறினர். அவர்களில் பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த அழகு நிலைய ஊழியர் ஒருவர், பசித்த வயிறுக்கு உணவளிக்க தமது முதலாளி மறுத்துவிட்டதாகத் தெரிவித்தார்.என்றாலும், ஏறக்குறைய அனைத்து வழக்குகளும் லேசானவை என்று, மேலும் இறப்பு விகிதங்கள் மிகக் குறைவாகவே உள்ளன, வெறும் 13 இறப்புகள் மட்டுமே என்பதாகவும் கத்தார் அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது