முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது
உத்தியோகபூர்வ அரச இல்லங்களை மீள கையளிக்காத முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 22 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர்கள் 22 பேருக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்தவகையில் பட்டியலில் உள்ள முன்னாள் அமைச்சர்களான , ரவூவ் ஹக்கீம், சந்திராணி பண்டார, எச் எம் குணசேகர, தினேஷ் கங்கந்த, லக்ஷ்மன் செனவிரத்ன, அமீர் அலி, ஜே.டி அலவதுவல, அசோக்க அபேசிங்க, எம்.ஹரீஸ், சம்பிக்க பிரேமதாச, பைசல் காசிம், செல்வம் அடைக்கலநாதன்,ரவீந்திர சமரவீர, ஹலீம்,சந்திம வீரக்கோடி, பைசர் முஸ்தபா,துளிப் விஜசேகர, டி.பி ஏக்கநாயக்க,ஜகத் புஸ்பகுமார, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரே இவ்வாறு இல்லங்களை கையளிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.