வரலாற்றிலேயே அதிக அளவு கடன் வாங்கும் அமெரிக்கா
கொரோனா வைரஸ் தொற்று பரவலால் உண்டாகியுள்ள பொருளாதார பாதிப்புகளை நிவர்த்தி செய்ய அமெரிக்க அரசு அறிவித்துள்ள நிதியுதவிகள் பட்ஜெட்டில் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளதால், இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அந்நாடு 3 ட்ரில்லயன் (3 லட்சம் கோடி) டாலர் கடன் வாங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு ஒரே காலாண்டில் அமெரிக்க அரசு வாங்கிய கடனைவிட இது ஐந்து மடங்கு அதிகம்.
அந்தத் தொகை 2008 பொருளாதார நெருக்கடி காலகட்டத்தில் வாங்கப்பட்டது.
2019 ஆண்டு முழுமைக்கும் சேர்த்து அமெரிக்க அரசு வாங்கிய கடன் 1.28 லட்சம் கோடி அமெரிக்க டாலர் ஆகும்.
இதுவரை 3 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவு மதிப்புள்ள நிவாரண உதவிகளை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
இத்துடன் அமெரிக்க அரசின் மொத்தக் கடன் சுமார் 25 லட்சம் கோடி டாலராக உள்ளது