பொழுது போக்குவதற்காக ஒரு நபர் செய்த செயலால் 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

ஆந்திரப்பிரதேசத்தில் முடக்க நிலை காலத்தில் பொழுது போக்குவதற்காக ஒரு நபர் செய்த சில செயல்களால் 56 பேருக்கு கொரோனா தொற்று பரவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப்பிரதேசத்தின் விஜயவாடா நகரில், தங்களுக்கு வைரஸ் பாதிப்பு உள்ளது தெரியாத ஒரு தம்பதி மூலம் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பரவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜயவாடாவில் உள்ள கிருஷ்ணலங்கா பகுதியில் கனரக வாகன ஓட்டுநர் ஒருவர் பொழுது போக்குக்காக தனது நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டுக்காரர்களுடன் சீட்டு விளையாடியுள்ளார்.

இது அந்த பகுதியில் கொரோனாவைரஸ் பரவ காரணமாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் அந்த ஓட்டுநரின் மனைவி அருகில் வசிக்கும் பெண்களையெல்லாம் கூப்பிட்டு பொழுதுபோக்குக்காக தம்போலா என்னும் ஒரு விளையாட்டை விளையாடியுள்ளார்.

இந்த இருவரும் அருகில் வசிப்பவர்களை இவ்வாறு அழைத்து அவர்களுடன் சேர்ந்து விளையாடி மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.

ஆனால் சில நாட்கள் கழித்து வாகன ஓட்டுநருக்கு இருமலும் காய்ச்சலும் வந்துள்ளது. அதனால் உள்ளூர் மருத்துவ பணியாளர்கள் உதவியுடன் அவருக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *