பெற்றத் தாயை கர்ப்பமாக்கி திருமணம் செய்த மகன்

சொந்த தாயை கர்ப்பமாக்கி அவரையே மகன் திருமணம் செய்து கொண்டு அதிர்ச்சி சம்பவம் ஜிம்பாவே நாட்டில் அரங்கேறியுள்ளது.
Mwenezi மாவட்டத்தை சேர்ந்தவர் பெட்டி மெபிரிகோ (40). இவரின் கணவர் 12 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்து விட்ட நிலையில் பரய் மெபிரிகோ (23) என்ற மகனுடன் அவர் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இருவரும் தாய் மகன் என்ற உறவினை மீறி தற்போது கணவன் மனைவியாகியுள்ளனர். ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் வெளியுலகிற்கு தெரிந்த இந்த விடயத்தால் அதிர்ச்சியடைந்தனர் கிராமத்தினர்.
ஆனால் இதற்கு ஒரு நியாயத்தையும் பஞ்சாயத்தில் கூறியுள்ளார். அவர் கூறுகையில், என் கணவர் இறந்த பின்பு யாரும் எனக்கு உதவில்லை. தற்போது நான் கஷ்டப்பட்டு படிக்க வைத்த வேலைக்கு சென்று கைநிறைய பணம் சம்பாதிக்கிறான்.
அவன் வேர்வை சிந்தி உழைக்கும் பணம் வேறு ஒரு பெண்ணிற்கு செல்லக்கூடாது என்பதால் இம்முடிவினை எடுத்துள்ளதாகவும், மேலும் எனது கணவரின் உடன்பிறந்தவர்களை திருமணம் செய்ய விருப்பமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதனை கிராம மக்கள் எதிர்த்துள்ள நிலையில், ஊர்த் தலைவர்கள் இந்த திருமணத்தை எங்களால் அனுமதிக்க முடியாது.முடிவை மாற்றவில்லையெனில் ஊரை விட்டு தாயும், மகனும் வெளியேறவேண்டும் என கூறியுள்ளனர்.
இதையடுத்து பெட்டியும், பரய்யும் ஊரை விட்டு காலி செய்துள்ளனர். இது கடந்தாண்டு நடந்த நிலையில் தற்போது பெட்டிக்கு குழந்தை பிறந்து இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *