பிரதமர் மஹிந்தவுக்கு ஆதரவு கொடுக்க தயாராகும் சம்பந்தர்?

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நாளை மறுநாள் இடம்பெறவுள்ள கூட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இரா.சம்பந்தன் சென்று கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தகவலை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சித்தார்த்தன் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியபோது அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
அத்துடன் அரசாங்கத்தின் கொரோனா ஒழிப்பு திட்டம் பாராட்டத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
இதேவேளை பிரதமருடனான குறித்த சந்திப்பை ஜே.வி.பி மற்றும் சஜித் அணி நிராகரித்துள்ளமை குறப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *