பாராளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு ஜனாதிபதிக்கு எதிராக கரு ஜயசூரிய போர்க்கொடி

கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு எதிர்கட்சிகளின் தலைவர்கள் முன்வைத்துவரும் கோரிக்கை நியாயமானது என தெரிவித்துள்ள முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, அதனை தாம் அனுமதிப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

நாடாளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்கட்சிகளின் தலைவர்கள் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டதோடு ஜனாதிபதிக்கு கடிதமும் அண்மையில் அனுப்பிவைத்த போதும், ஜனாதிபதி அதனை நிராகரித்து வருகின்றார்.

இப்படியான நிலையிலேயே முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, இந்தக் கோரிக்கையை நியாயப்படுத்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *