இலங்கையில் நாடுமுழுவதும் 181 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தல்
கொரோனா தோற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் காரணமாக நாடுபூராகவும் 181 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் வீடுகளிலும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.
இதேவேளை அபாய வலயங்களில் கடமையாற்றிய 75 பொலிஸார் PCR சோதனைக்கு உட்படுத்தட்டனர் என்றும் அவ்ரகளுள் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.