இலங்கையில் மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம்
நாடு முழுவதும் நாளையும் (27) பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களைத்தவிர ஏனைய 21 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் நாளை (27) காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், விடுமுறையில் சென்றுள்ள முப்படையினர் முகாம்களுக்கு திரும்புவதற்கு இலகுவாக இருக்கும் வகையிலேயே நாளை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.
எனினும், மேற்படி 19 மாவட்டங்களிலும் 28 ஆம் திகதி காலை 5 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு அன்றிரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.மே முதலாம் திகதிவரை இந்தநடைமுறை தொடரும்.