கொழும்பில் தாய்க்கு கொரோனா சிசு மரணம்
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளது.
415 ஆவது கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்டவர் கொழும்பு டி சொய்சா மகளிர் வைத்தியசாலையில் இன்று மாலை அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண்ணொருவராகும். இவர் மருதானை பகுதியைச் சேர்ந்தவர்.
குறித்த வைத்தியசாலையிலுள்ள, கொரோனா வைரஸ் விஷேட பிரிவில் இவர் அனுமதிக்கப்படும் முன்பே சிசு உயிரிழந்துள்ளது.
குறித்த பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு கிழக்கு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.