இலங்கையில் ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

இலங்கையில் மேலும் 13 கொரோனா நோயாளிகள் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 269 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினத்தில் மாத்திரம் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒருவருடன் தொடர்பை பேணிய நிலையில், கொழும்பிலுள்ள கொரோனா தடுப்பு முகாமில் மருத்துவ கண்காணிப்பில் இருந்த 15 பேருக்கே கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். 91 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *