அமெரிக்காவில் ஒரே நாளில் 2407 பேர் உயிரிழப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.26 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 126,596 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 1,997,620 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 478,425 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 51,595 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

  • இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை10,815 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 353 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 1,190 பேர் குணமடைந்தனர்.  
  • தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,204 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது.
  • அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 26,047 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 613,886 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2,407 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 21,067ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 162,488 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 602 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 18,255 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 174,060 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 499 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 15,729 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 143,303 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 762 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 12,107 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93,873 ஆக உயர்ந்துள்ளது. பிரிட்டனில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 778 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,683 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,877 ஆக அதிகரித்துள்ளது.
  • சீனாவில் 3,341 பேரும், ஜெர்மனியில் 3,495 பேரும், பெல்ஜியத்தில் 4,157 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
  • நெதர்லாந்து 2,945 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் 1,403 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,174 பேரும், பிரேசில் நாட்டில் 1,532 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.
  • சீனாவில் 82,249 பேருக்கும், ஜெர்மனியில் 132,210 பேருக்கும் கொரோனா பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *