கொரோனா வைரஸால் ஐ.சி.சி நடுவருக்கு வந்த சோதனை
இந்தியாவைச் சேர்ந்த ஐ.சி.சியின் சர்வதேச கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள குக்கிராமம் ஒன்றுக்கு சென்றதால் எந்தவொரு அடிப்படை வசதிகளும் இன்றி பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றார்.
இதில் குறிப்பாக கைத்தொலைபேசி பேசுவதற்கான போதியளவு இணைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் மரத்தின் உச்சிக்கு சென்று பேசுகின்ற நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் நடுவர்களில் ஒருவரான அனில் சவுத்ரி. ஐ.சி.சியின் எலைட் பிரிவில் நடுவராக உள்ளார். சவுத்ரி இதுவரை 20 ஒருநாள் மற்றும் 27 டி20 போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார்.