இலங்கையை சேர்ந்த இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி
புலம்பெயர்ந்து லண்டனில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த யாழ்ப்பாணம் மயிலிட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மயிலிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவரும் யாழ் ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவருமான அழகரத்தினம் ஜீவிதன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த ஒரு கிழமைக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான அவருக்கு, லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது.