வெப்பம் அதிகமாக இருக்கும் நாடுகளில் கொரோனா வைரஸ் அழிந்து விடுமா?

வெப்பம் அதிகமாக இருக்கும் நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவாது என கூறப்பட்டதை தற்போது நம்புவதற்கில்லை. ஏனென்றால் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கிட்டதட்ட அனைத்து நாடுகளிலும் பரவிவிட்டது. ஆனால் இதுகுறித்த புதிய ஆய்வுகள் ஏதேனும் நமக்கு நம்பிக்கை தருவதாக உள்ளதா?

கொரோனா வைரஸ் தொற்று பரவல் பருவ நிலையை பொறுத்தது என்பதை சொல்வதற்கு இன்னும் சற்று காலம் தேவை. கொரோனா தொற்று, பருவநிலையை பொறுத்ததா என்பதை தெரிந்து கொள்ள ஒரு வருடம் முழுக்க ஓர் இடத்தில் எவ்வாறு அந்த தொற்று பரவல் மாறுபடுகிறது என்பதை ஆராய வேண்டும்.

இருப்பினும் இது வெவ்வேறு பருவநிலை கொண்ட நாடுகளில் எவ்வாறு பரவுகிறது என்பதை வைத்து நாம் சிறிது புரிந்து கொள்ளலாம்.

என்ன ஆதாரம்?

கொரோனா வைரஸ் தொற்று குறிப்பாக குளிர்ந்த பகுதிகளில் பரவியதற்கான சில ஆதாரங்களும் உள்ளன.

ஆஸ்திரேலிய கடற்கரை

மார்ச் 10ஆம் தேதி வரை பார்த்தால், கொரோனா தொற்று பரவிய நாடுகளில் சராசரி வெப்பநிலையைக் காட்டிலும் குறைவான வெப்பம் இருந்ததாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

மற்றொரு ஆய்வு 40க்கும் அதிகமான கொரோனா தொற்று நபர்களை கொண்ட சீன நகரங்களை ஆய்வு செய்தது. அதில் வெப்பநிலை அதிகமாக இருந்தால் அங்கு கொரோனா தொற்று குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.

மற்றொரு உறுதிப்படுத்தப்படாத ஆய்வில், கொரோனா தொற்று உலகமுழுவதும் பரவி இருந்தாலும், குறிப்பாக குளுமையான நாடுகளிலேயே அதிகம் பரவி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜின் அண்ட் ட்ராப்பிக்கல் மெடிசனை சேர்ந்த ஆய்வாளர்கள், உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் அனைத்திலும் இது பரவிவிட்டது, அது குளிர் பிரதேசமாக இருந்தாலும் சரி வெப்பநிலை அதிகமாக இருக்கும் நாடுகளாக இருந்தாலும் சரி என்கின்றனர்.

துருவங்களில் மாற்றங்கள் ஏற்படுகிறதா?

காய்ச்சலை உண்டாக்கும் வைரஸ் உட்பட பிற வைரஸ்கள் பூமியின் தெற்கு மற்றும் வடக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள நாடுகளில், குறிப்பிட்ட சில காலங்களில் மட்டும் பரவும் தன்மையைக் கொண்டதாக உள்ளது. ஆனால் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள வெப்பமண்டல பகுதிகளில் இந்தத் தன்மை இருப்பதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *