குவைத் நாட்டில் இலங்கையர் உட்பட 78 பேருக்கு கொரோனா வைரஸ்

குவைத்தில் இன்று இலங்கையர் ஒருவர் உட்பட 78 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
குவைத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 78 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக குவைத் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதுவரை குவைத்தில்  மொத்தமாக 743 பேர்  கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இவர்களில்  23 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 17 பேர் சிகிச்சையில் சாதாரண நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 06 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் குவைத் சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் அப்துல்லாஹ் அல்-சனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதுவரை ஒருவர் கொரோனாவினால் மரணமடைந்துள்ளார். இன்று கண்டறியப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் ஒருவர் இலங்கையர் என்றும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *