இலங்கை நாட்டு மக்களிடம் ஜனாதிபதி விஷேட கோரிக்கை
ஊரடங்குச்சட்டத்துக்கு மதிப்பளித்து வீட்டில் இருக்குமாறு நாட்டு மக்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” இந்த நிமிடம் வரையான நிலைவர அறிக்கையின்படி – ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக இதுவரை 11 ஆயிரம் இலங்கையர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கு ஒரே தீர்வுதான் உள்ளது. முடிந்தவரை வீட்டில் இருப்பதுதான் அது. உங்கள் ஜனாதிபதியாக, உங்கள் பாதுகாப்பின் பொறுப்பை நான் ஏற்றுச் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றேன்.
ஒரு குடிமகனாக, ஒரு குடிமகளாக – உங்கள் கடமையைச் செய்து, தரப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைத் தயவுசெய்து பின்பற்றுங்கள்.” – என்றார்.