மனைவியையும் மூன்று வயது மகளையும் கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கிய நபர்
கம்பஹாவில் மனைவியையும் மகளையும் கொலை செய்த தந்தை ஒருவர் தானும் தற்கொலை தொங்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
28 வயதுடை மனைவியை கூரிய ஆயுதத்தினால் கொலை செய்த குறித்த நபர் 3 வயது மகளை கழுத்தை நெறித்து கொலை செய்துளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் 37 வயதுடைய தந்தையான குறித்த நபர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் கொலை சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.