கொழும்பு மருதானையில் இரண்டாயிரம் பேர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

மருதானை ஆர்னோல்ட் ரத்நாயக்க மாவத்தையிலுள்ள 2 ஆயிரம் பேர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று கொழும்பு மாநகரசபையின் சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

‘கொரோனா’ வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்த மருதானைப் பகுதியைச் சேர்ந்த நபரொருவர் நேற்று இரவு உயிரிழந்தார்.

இதனையடுத்தே அவர் வசித்த தொடர் மாடி குடியிருப்பு உட்பட அப்பகுதியிலுள்ள 18 தொடர் மாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், உயிரிழந்த நபரின் மகள், மருமகன், பேரப்பிள்ளைகள் அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *