சீனாவில் மீண்டும் மாமிச வியாபாரம் ஆரம்பம்

சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி அச்சத்தை தோற்றுவித்துள்ளது.
இதுவரை கொரோனா பாதிப்பால் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த உலகநாடுகள் அனைத்தும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
சீனாவில் வுஹான் மார்க்கெட்டில் விற்கப்பட்ட பாம்பு, எறும்பு தின்னி அல்லது வௌவால்கள் மூலம் கொரோனா பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கொரோனாவின் பிடியில் சீனா சிக்கி தவித்தபோது இதுபோன்ற உணவு பொருட்களை விற்பனை செய்ய அந்நாட்டில் கடும் தடைகள் விதிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் தற்போது, சீனா கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டுவந்திருப்பதை கொண்டாட மீண்டும் சீனர்கள் வவ்வால்கள், பூனைகள், நாய்கள் போன்றவற்றை விற்பனையை தொடங்கி விட்டதாக கூறப்படுகின்றது.

சீனாவின் குயிலின் மார்க்கெட்டில் இதுபோன்ற இறைச்சிகள் சலுகை விலையில் விற்பனை செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
உலகமே கொரோனாவின் பிடியில் இருக்கும்போது சீனர்கள் மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *