இலங்கையில் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் 29 சிறுவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி

கொரோனா வைரஸ் சந்தேகத்தில் சுமார் 29 சிறுவர்கள் கொழும்பு சிறுவர் மருத்துவமனையான பொறளை லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இலங்கையில் பல்வேறு மருத்துவமனைகளில் இதுபோன்ற பல சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்படுகிறது.

இலங்கையில் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட முதலாவது குழந்தை நேற்று இனங்காணப்பட்டது.

குருநாகல் நாத்தண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இந்த குழந்தையின் பாட்டனார் அண்மையில் இந்தியா சென்றுவந்ததை அடுத்து அவருக்கு ஏற்பட்ட கொரோனா சந்தேக அறிகுறிகளால் அவர் உட்பட அந்த குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்போது கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *