இத்தாலியில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 919 ஆக அதிகரிப்பு

COVID-19 வைரஸ் தாக்கத்தின் அதிகபட்ச இழப்பாக 919 பேர் கடந்த 24 மணி நேரத்தில் இத்தாலியில் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை இத்தாலியில் 9,134 ஆக உயர்ந்தது.
இந்த இறப்புகளில் 500 க்கும் மேற்பட்டவை லோம்பார்டியில் மட்டும் பதிவாகியுள்ளது.
இதேவேளை இப்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகால நிலையை மேலும் இரண்டு வாரங்கள் நீடிக்க பிரான்ஸ் அரசு தீர்மானித்துள்ளது