அமெரிக்காவில் ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா

ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா – உலக அளவில் முதலிடத்தை பிடித்த அமெரிக்கா
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 15 ஆயிரத்து 461 பேருக்கு வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்து 672 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 182 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 209 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் முண்ணனியில் இருந்த சீனாவையும் (81 ஆயிரத்து 285 பேர்) இத்தாலியையும் (80 ஆயிரத்து 589 பேர்) பின்னுக்கு தள்ளி வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் என்ற எண்ணிக்கையில் (83 ஆயிரத்து 672 பேர்) உலக அளவில் அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது.