பிரதமர் தலைமையில் நாளை அவசர சர்வகட்சி கூட்டம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு பிரதமர் செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை காலை பிரதமர் அலரிமாளிகையில் இக்கூட்டம் அலரிமாளிகையில் நடைபெறும்.

‘கொரோனா’ வைரஸை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் தேசிய வேலைத்திட்டம் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *