கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 14000ஐ தாண்டியது

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 616 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது.
இந்நிலையில் உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை336,838 ஆக உயர்ந்துள்ளது.
இத்தாலியில் 5,476 பேரும், சீனாவில்3,261 பேரும், ஈரானில் – 1,685 பேரும், ஸ்பெயின் – 1,756 பேரும் பலியாகியுள்ளனர்.
இலங்கையில் இதுவரையில் 81 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.