இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை திருப்பி அனுப்ப ஏற்பாடு
இலங்கையில், தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை, மீள அவர்களது நாட்டிற்கு அனுப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாட்டில் சுமார் 38,000 வெளிநாட்டவர்கள் தங்கியிருப்பதாகவும் அவர்களை, அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.