ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிக்கு கொரோனா வைரஸ்

ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் விமானி ஒருவர்,  கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக அடையாளங் காணப்பட்டதையடுத்து, ஏனைய சில அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, குறித்த விமானி சிகிச்சைகளுக்காக தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விமானி, இறுதியாக சிங்கப்பூரிலிருந்து விமானத்தை செலுத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவருடன் குறித்த விமானத்தில் வருகை தந்த மேலும் மூன்று பேர் தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *